சென்னையில் 6 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னையில் 6 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னையில் 6 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
Published on

சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் அண்மைக்காலமாக ‌வழப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித‌து வருகின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் 14 வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதையடுத்து, நேற்றிரவு காவல்துறையினர் தீவிர வாகனச் சோதன‌யில் ஈடுபட்டனர். அப்போது, சாத்தங்காடு பகுதியில் 3 வழிப்பறி கொள்ளையர்களையும் வேப்பேரி பகுதியில் 3 வழிப்பறி கொள்ளையர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் 30 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், பைக் ரேசில் ஈடுபட்டதாக அபிராமிபுரத்தில் 16 இருசக்கர வாகனங்களும், மயிலாப்பூரில் 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அடையாறு, மெரினா, ஆர்.கே.நகர் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளிலும் அதிவேகமாகச் சென்றதாக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தம் 42 பைக்குகளை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், அதிவேகமாக சென்றது தொடர்பாக இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com