\
சிதம்பரம்: சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப்பேருந்து - 6 பேர் படுகாயம்

சிதம்பரம்: சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப்பேருந்து - 6 பேர் படுகாயம்

சிதம்பரம்: சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப்பேருந்து - 6 பேர் படுகாயம்
Published on

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறை நோக்கி புறப்பட்ட பேருந்து புறவழிச்சாலையில் சென்றபோது எதிரே வந்த காரின்மீது மோதாமல் இருக்க திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் படுகாயமுற்றனர். 

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com