Police investigationpt desk
தமிழ்நாடு
நாமக்கல்: 6 மாத ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்
ராசிபுரம் அருகே 6 மாத ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்... சடலத்தை கைப்பற்றி ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: மோகன்ராஜ்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள லட்சுமி தெரு அருகே இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாக்கடையில் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்து தூாய்மைப் பணியாளர், குழந்தையின் சடலத்தை மீட்டு ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Police investigationpt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.