5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம் 

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம் 
5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம் 

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு ஆட்சியராக ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷிணி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு நியமித்துள்ளது. 

முன்னதாக, 5 புதிய மாவட்டங்களுக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை (எஸ்.பி) தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com