மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது 

மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது 
மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது 

மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முகம்மது பைசான் என்பவரை தாக்கியதாக தினேஷ் குமார், கணேஷ் குமார், மோகன் குமார் , அகஸ்தியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 5 பிரிவுகளில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com