எழும்பூரில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

எழும்பூரில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

எழும்பூரில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
Published on

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த 3 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா பொட்டலங்களுடன் சிலர் சுற்றுவதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கண்காணித்தபோது, சந்தேகப்படும்படியாக பையுடன் சுற்றித்திரிந்த 4 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த பைக்குள் 23 பொட்டலங்களாக 46 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

விசாரணையில் அவர்கள் தேனியைச் சேர்ந்த கணேசன், சசிகலா, பாண்டீஸ்வரி மற்றும் திருச்சியைச் சேர்ந்த பாத்திமா சலீம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரும் ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா பொட்டலங்கள் கொண்டு வந்ததும், பஸ் மூலம் அவர்கள் தேனி செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட 4 பேரையும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். எழும்பூர் போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com