சீர்காழி : பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

சீர்காழி : பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது
சீர்காழி : பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

சீர்காழி புறவழிச்சாலையில் பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவச்சாலையில் உள்ள வனபகுதியில் சிலர் தொடர் பறவைகள் வேட்டையில் ஈடுபடுவதாக சீர்காழி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனக்காவலர்கள் பறவைகளை வேட்டையாடிய நான்கு பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரனையில் சீர்காழி பிடாரி தெற்கு வீதியை சேர்ந்த ஜார்ஜ் பிரபாகன், ரமேஷ், ஹரி, வெற்றி ஆகியோர் என்பதும் இவர்கள் பொழுது போக்குகாக உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து பறவைகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யபட்ட நால்வரும் சீர்காழி குற்றவியல் நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு 15 நாள் நீதிமன்ற காவலிலல் சிறையில் அடைக்கபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com