தென் மாவட்டங்கள்: மழை, வெள்ள மீட்புப் பணிகளை கண்காணிக்க மேலும் 4 அமைச்சர்கள் நியமனம்!

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 5 அமைச்சர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் 4 அமைச்சர்கள் மீட்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகிய 4 அமைச்சர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஞானதிரவியம் உள்ளிட்டோரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com