நீரின்றி பயிர்கள் கருகியதால் தொடரும் துயரம்... இன்று 4 விவசாயிகள் உயிரிழப்பு

நீரின்றி பயிர்கள் கருகியதால் தொடரும் துயரம்... இன்று 4 விவசாயிகள் உயிரிழப்பு

நீரின்றி பயிர்கள் கருகியதால் தொடரும் துயரம்... இன்று 4 விவசாயிகள் உயிரிழப்பு
Published on

தமிழகத்தில் பயிர்களைக் காப்பாற்ற நீரின்றி பாதிக்கப்பட்டதால், இன்று காலை முதல் 4 விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அய்யடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் ஆகிய விவசாயிகளுக்கு பயிர்கள் கருகிய சோகத்தினால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

இதேபோல், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கே.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்பையா என்ற விவசாயியும் பயிர்கள் வாடிய வேதனையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் அதனூரில் மகாலிங்கம் என்ற விவசாயியும் பயிர்கள் நீரின்றி கருகிய துக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பருவ மழை பொய்த்துப் போன நிலையில், பயிர்களைக் காப்பாற்ற போதிய நீர் இல்லாததால் தமிழகத்தில் விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழப்பது தொடர்கிறது. இதைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com