அரியலூர்: புளிய மரத்தில் மோதிய கார் - 2 பெண்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் பலி

அரியலூர்: புளிய மரத்தில் மோதிய கார் - 2 பெண்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் பலி
அரியலூர்: புளிய மரத்தில் மோதிய கார் - 2 பெண்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் பலி

அரியலூரில் புளிய மரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சென்னையில் உள்ள info-tech ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா, குழந்தைகள் மித்ரா, யாஷினி ஆகிய 5 பேரும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று கிளம்பிய அவர்கள் சென்னைக்கு செல்லும் வழியில் அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் என்ற இடத்தில் சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இளைய மகள் யாஷினி படுகாயத்துடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் பெரிய மகள் மித்ராவுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதங்களை கைப்பற்றிய போலீசார் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com