திருச்செந்தூர்: குவைத்தில் பணிபுரிந்து வரும் என்ஜினியர் வீட்டில் நகை கொள்ளை!

திருச்செந்தூர்: குவைத்தில் பணிபுரிந்து வரும் என்ஜினியர் வீட்டில் நகை கொள்ளை!
திருச்செந்தூர்: குவைத்தில் பணிபுரிந்து வரும் என்ஜினியர் வீட்டில் நகை கொள்ளை!

திருச்செந்தூர் அருகே குவைத்தில் பணி புரியும் என்ஜினீயர் வீட்டில் 36 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே பேயன்விளை ஏஐடியுசி நகரைச் சேர்ந்தவர் சுதர்சன செல்வ பாபு. இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன செல்வ பாபு குவைத்தில் பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் தங்கம் தனது 3 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் உறவினர் இறப்பிற்காக தங்கம் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களின் இணைப்பு குவைத்தில் பணிபுரியும் என்ஜினீயர் சுதர்சன செல்வ பாபு கண்காணிப்பில் இருந்துள்ளது. இதையடுத்து இணைப்பு சரியாக தெரியாத நிலையில் மனைவி தங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே இன்று காலை வீடு திரும்பிய தங்கம், கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். மேலும், மாடிக்கதவு உடைக்கப்பட்டு சிசிடிவி கேமாராக்கள் திசை திருப்பப்பட்டிருந்தன. தங்கம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 36 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆறுமுகநேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிபடைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com