\
32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு உறுதி

32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு உறுதி

32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு உறுதி
Published on

தமிழ்நாட்டில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ''தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. மீதமுள்ள சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்'' என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com