3 ஆண்டுகளாக செயல்படாத அரசு சேவை மையம்

3 ஆண்டுகளாக செயல்படாத அரசு சேவை மையம்

3 ஆண்டுகளாக செயல்படாத அரசு சேவை மையம்
Published on

விருதுநகரில் 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள ஊராட்சி சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே வில்லிபத்திரி கிராமத்தில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டடம் சுமார் 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. சேவை மையம் பூட்டியே உள்ளதால், சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விருதுநகருக்கு செல்ல வேண்டியுள்ளதாக கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.14.55 லட்சம் மதிப்பில் ஊராட்சி சேவை மையம் கட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அது மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவில்லை. அதனால், வில்லிபத்திரி, கெப்லிங்கம்பட்டி உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் கட்டடத்தை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com