சிறுமியை பின்தொடர்ந்து ஓடிய குழந்தை - பள்ளி வாகனம் ஏறியதில் உயிரிழந்த பரிதாபம்

சிறுமியை பின்தொடர்ந்து ஓடிய குழந்தை - பள்ளி வாகனம் ஏறியதில் உயிரிழந்த பரிதாபம்
சிறுமியை பின்தொடர்ந்து ஓடிய குழந்தை - பள்ளி வாகனம் ஏறியதில் உயிரிழந்த பரிதாபம்

கிருஷ்ணகிரியில் பள்ளிச்சிறுமியை பின்தொடர்ந்து சென்று பள்ளி வாகனத்தில் ஏற முயன்ற குழந்தை, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கரடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது 3 வயது மகன் குருபிரசாத். இன்று காலை வேடியப்பனின் உறவினர் மகள் தனது பள்ளி பேருந்தில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அச்சிறுமியின் பின்னால் குழந்தை குருபிரசாத் ஓடியிருக்கிறது. குழந்தை குருபிரசாத் பின்தொடர்ந்து வருவதை கவனிக்காத சிறுமி, பள்ளி பேருந்தில் ஏறியிருக்கிறார்.

அவரின் பின்னால் ஓடிச்சென்ற குழந்தையும் பேருந்தில் ஏற முயற்சித்திருக்கிறது. இதை கவனிக்காமல் ஓட்டுனர் பேருந்தை இயக்கியதால், குழந்தை குருபிரசாத் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதனால் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் உயிரிழந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com