சரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

சரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது
சரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

ஆந்திராவில் சினிமா பாணியில் சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரங்களை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குக்கல் தொட்டி அருகே அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி-கடப்பா சாலையில் வந்து கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 8 செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ரகசிய அறை அமைத்து அதற்கு வெளியே தக்காளி கூடைகளை வைத்துள்ளனர். செம்மரங்களை கைப்பற்றிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மரக்கட்டைகள் கர்நாடகாவிற்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com