தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் லட்சக்கணக்கில் மோசடி: சிக்கிய காவலர்கள்

தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் லட்சக்கணக்கில் மோசடி: சிக்கிய காவலர்கள்

தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் லட்சக்கணக்கில் மோசடி: சிக்கிய காவலர்கள்
Published on

தஞ்சையில் உள்ள தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் இருந்து முறைகேடாக பொருட்களை விற்பனை செய்து 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை அந்த அங்காடியில் முறைகேடாக பொருட்களை எடுத்துச் சென்று வெளியே விற்பனை செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்காடியின் கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளராக இருந்த உதவி ஆய்வாளர் வீராச்சாமி, ஹெட் கான்ஸ்டபிள் வீரம்மாள், விற்பனையாளராக இருந்த காவலர் வளர்மதி ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் காவலர்கள் கோகிலவாணி, மனோஸ்ரீ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், முறைகேடாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் பொருட்களில் 70 சதவிகிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com