2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது

2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது
2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது

கன்னியாகுமரியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், திரையரங்கில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தார். அந்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டதால் திரையரங்கு ஊழியர்கள் கோட்டார் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து விசாரித்ததில், ரமேஷ் கொடுத்தது ஜெராக்ஸ் ரூபாய் நோட்டு என‌க் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அவர் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, ரமேஷ் அவரது கூட்டாளிகள் தினகரன், ஜோசப் மெனோவா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை எவ்வளவு ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com