ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் : 3 பேர் பணியிடை நீக்கம்

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் : 3 பேர் பணியிடை நீக்கம்
ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் : 3 பேர் பணியிடை நீக்கம்

(கோப்புப் படம்)

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரு ரயில்கள் வந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்ட ரயில் தாமதமாக திருமங்கலம் ரயில்நிலையம் வந்தலிருந்து மதுரை நோக்கி அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரயில் வந்துக் கொண்டிருந்தது.

ஒருவழிப் பாதை என்பதால் செங்கோட்டை செல்ல வேண்டிய ரயில் திருமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டதால், இரு ரயில்களும் மோதும் நிலை உருவானது. 

(மாதிரிப் படம்)

இதைத் தொடர்ந்து வாக்கி டாக்கி மூலம், இரு ரயில்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. பின்னர் செங்கோட்டை சென்ற ரயில் மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தது. சிக்னல் கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில் இதுகுறித்த புகாரில் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனின் நடவடிக்கை எடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com