எப்படி மீட்கப்படுவார் சுர்ஜித்?: 90 அடி குழிக்குள் இறங்க தயார் நிலையில் மூவர்..!

எப்படி மீட்கப்படுவார் சுர்ஜித்?: 90 அடி குழிக்குள் இறங்க தயார் நிலையில் மூவர்..!

எப்படி மீட்கப்படுவார் சுர்ஜித்?: 90 அடி குழிக்குள் இறங்க தயார் நிலையில் மூவர்..!
Published on

புதிய குழிக்குள் இறங்க 3 பேர் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர்  70 அடி ஆழத்துக்கு சென்ற குழந்தை தற்போது 85 அடி ஆழத்தில் உள்ளது. 24 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்டப்பட உள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.

குழி தோண்டப்பட்ட பிறகு பக்கவாட்டில் குழி தோண்டி ராணுவ வீரர்களை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் தயார் நிலையில் உள்ளனர். குழி தோண்டப்பட்டதும் மூவரும் தக்க பாதுகாப்புடன் குழிக்குள் இறக்கப்படுவார்கள் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com