திமுக கவுன்சிலர்கள் 3 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து, திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டை சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர். மணி என்கிற சுண்ணாம்பு மணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் ஆணையரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபடுவது, ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது என தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், 3 கவுன்சிலர்கள் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com