மதுரை: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

மதுரை: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
மதுரை: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் காசிமணி(46). இவர் தனது மனைவி ராமு களஞ்சியம், மகன் ராகுல், மருமகன் தலைமலை, உறவினர் கௌதம் மற்றும் ஓட்டுனர் என குடும்பத்துடன் திருமண நிகழ்வுக்காக புத்தாடைகள் வாங்க மதுரைக்கு சென்றுவிட்டு மீண்டும் கோவிலூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கார் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி - குன்னத்தூர் இடையே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. எதிரே வந்த காரானது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்தது. விபத்தில் இந்த காரில் சென்ற மதுரை கே.புதூரை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஜுபுதின் (45) அவருடன் பயணம் செய்த அடையாளம் தெரியாத மற்றொரு நபர் மற்றும் காரை இயக்கிய ஓட்டுனர் என மூவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காசிமணியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் என ஆறு பேரும் படுகாயமடைந்து முதலுதவி சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மூவரில் இருவர் அடையாளம் தெரியாததால் அவர்களைப் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com