அரியலூர்: ஓடை நீரில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு

அரியலூர்: ஓடை நீரில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு
அரியலூர்: ஓடை நீரில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஓடை நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமத்தில் சுதாகர் மற்றும் மைக்கேல் என்கிற ஜெயசீலன் என்ற அண்ணன், தம்பிகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது கிராமத்திலிருந்து இடுகாடு செல்லும் வழியிலுள்ள சின்ன ஓடை என்ற ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை உள்ளது. அந்த தடுப்பணை சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் ஓடைக்கு அருகே இரண்டு நபர்கள் ஆழமுள்ள குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அந்தப் பகுதியில் சுதாகர் மற்றும் மைக்கேல் என்பவர்களின் குழந்தைகளான சுடர்விழி(7) , ஸ்ருதி(9) , ரோகித்(6) ஆகிய மூன்றுபேரும் தண்ணீர் தேங்கியிருந்த வழியாக உறவினரைப் பார்க்க சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு சென்றபோது சேற்றில் வழுக்கி மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com