மதுரை: உசிலம்பட்டி அருகே கண்டறியப்பட்ட பழமையான சிற்பங்களுடன் கூடிய 3 நடுகற்கள்

மதுரை: உசிலம்பட்டி அருகே கண்டறியப்பட்ட பழமையான சிற்பங்களுடன் கூடிய 3 நடுகற்கள்
மதுரை: உசிலம்பட்டி அருகே கண்டறியப்பட்ட பழமையான சிற்பங்களுடன் கூடிய 3 நடுகற்கள்

உசிலம்பட்டி அருகே 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான சிற்பங்களுடன் கூடிய நடுகற்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்த நிலையில் இருந்த ராணி மங்கம்மாள் சிற்பம் கொண்ட நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து மீட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைக்குன்று பகுதியில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இதில், மண்ணில் புதைந்த நிலையில் இருந்த ராணி மங்கம்மாள் தோற்றம்கொண்ட சிற்பத்துடன் கூடிய நடுகல்லையும், வேட்டை சமூகம் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான அடையாளமாக வேடன், வில் அம்புடனும் அவரது மனைவி மற்றும் வேட்டையாடும் விலங்குகள் கொண்ட நடுகல் தமிழ் கல்வெட்டுகளுடன் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கோவில்களில் மட்டுமே காணப்படும் கலை நயமிக்க சிற்பங்களுடன் கூடிய நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ராஜா குதிரையில் செல்வது போன்றும் அவரின் அருகே ராணி, குடை பிடிப்பவர், முன்புறம் ஒரு காவலாளி, பின்புறம் ஒரு காவலாளி என கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட நடுகற்கள் அரிதானவை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரையிலிருந்து சேரநாட்டுக்கு செல்லும் பெருவழிப்பாதையாக இருந்த இந்த பகுதியில் தொடர்ந்து பல்வேறு வகையான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வரும் சூழலில், விரிவான அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல தொல்லியல் எச்சங்கள் வெளிப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com