மதுரை: கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு : 3 பேர் கைது

மதுரை: கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு : 3 பேர் கைது
மதுரை: கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு : 3 பேர் கைது

மதுரையில் பேச்சியம்மன் கோயில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சிலை, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ள்னர்.

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியிலுள்ளது பழமை வாய்ந்த பேச்சியம்மன் கோயில். இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 3 சுவாமி ஐம்பொன் சிலைகள், குத்துவிளக்கு, சங்கு உள்ளிட்ட பித்தளை பொருட்களை திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திலகர் திடல் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரையும் , சுவாமி சிலைகள் மற்றும் பொருட்களை விலைக்கு வாங்கிய மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முஹம்மது முஸ்தா மற்றும் செபஸ்தியான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கோயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலைகள், பித்தளை குத்துவிளக்கு சங்கு உள்ளிட்ட பொருட்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com