தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 27 பேர் கைது

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 27 பேர் கைது
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 27 பேர் கைது

கச்சத்தீவு அருகே தமிழக மீ‌னவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதேபோல், நள்ளிரவு 27 மீனவர்கள் கைது ‌செய்யப்பட்டனர். 

கடந்த 11 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க விடாமல் அவர்களை இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தியிருக்கின்றனர். பின்னர் இன்று காலை கரை திரும்பும் நேரத்தில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் தூக்கி வீசியிருக்கின்றனர். 

அதேபோல், நெடுந்தீவு அருகே நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த 27 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தும், 5 படகுகளையும் பறிமுதல் செய்தும் உள்ளனர். இலங்கை கடற்படையி‌ரின் அத்துமீறலை தடுக்‌க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com