இலங்கைக்கு கடத்த மணலில் புதைத்து வைத்திருந்த 250 ஜோடி உயர்ரக காலணிகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த மணலில் புதைத்து வைத்திருந்த 250 ஜோடி உயர்ரக காலணிகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மணலில் புதைத்து வைத்திருந்த 250 ஜோடி உயர்ரக காலணிகள் பறிமுதல்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இன்று இரவு இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்த இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகளை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக சமையல் மஞ்சள்கள், கேரள கஞ்சா, கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்டவைகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளருக்கு சனிக்கிழமை இரவு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடத்தல் பொருட்களை நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் சேராங்கோட்டை கடற்கரையில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சேராங்கோட்டை கடற்கரை மணலில் வெள்ளை சாக்கு மூட்டைகள் சில புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதை தோண்டி எடுத்து சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட சாக்குப் பைகளில் 250 ஜோடி காலணிகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 250 ஜோடி காலணிகளையும் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தினர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 250 ஜோடி காலணிகளின் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் எனவும், அதை நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு சமையல் மஞ்சள், யூரியா உரம், வலி நிவாரணி, மருத்துவப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 250 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com