ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 200+ குழந்தைகளை பத்திரமாக மீட்ட தென்னக ரயில்வே படை!

ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 200+ குழந்தைகளை பத்திரமாக மீட்ட தென்னக ரயில்வே படை!

ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 200+ குழந்தைகளை பத்திரமாக மீட்ட தென்னக ரயில்வே படை!

தென்னக ரயில்வேயின் கீழுள்ள ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 231 குழந்தைகள், ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

வறுமைச் சூழல், பெற்றோரிடம் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களில் தவிக்கும் இளம் சிறார்களை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன், ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை ரயில் நிலையங்களில் ஆதரவின்றியும், சந்தேகப்படும் படியும் சுற்றித்திரியும் சிறுவர், சிறுமிகளை விசாரித்து பெற்றோர்களோடு சேர்த்து வைப்பதோடு, பெற்றோர்களை இழந்த குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கின்றனர். அதன்படி தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள 143 ரயில் நிலையங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்த, 231 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில் 176 குழந்தைகள், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்தில் 21குழந்தைகள், திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களில் 18 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 6 பேரும், தூத்துக்குடியில் 6 பேரும், விருதுநகரில் 4 பேர் என மொத்தம் 196 ஆண் குழந்தைகள், 35 பெண் குழந்தைகள் என 231 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, அவர்களை காப்பகங்களில் சேர்த்துள்ளனர்.

மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய 4 ரயில்நிலையங்களில் குழந்தைகளுக்கான உதவி மையங்கள் செயல்பட்டுவருவது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com