காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 213 ஏரிகள் நிரம்பின..!
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 213 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 213 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.
288 ஏரிகள் 75% தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 196 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளது. 181 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 1 ஏரி நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான 18 அடி கொள்ளளவு கொண்ட தாமல் ஏரி, 4 அடி நீர் நிரம்பி உள்ளது. அதேபோல் 18 அடி கொள்ளளவு கொண்ட தென்னேரி ஏரி, 16 அடி நீர் நிரம்பி உள்ளது. 20 அடி கொள்ளளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரி, 6.50 அடி நீர் நிரம்பி உள்ளது. 18 அடி கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி, 16.19 அடி நீர் நிரம்பி உள்ளது. 18.60 அடி கொள்ளளவு உடைய மணிமங்கலம் ஏரி, 16.90 அடி நீர் நிரம்பி உள்ளது
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 23.30 அடி கொள்ளளவு கொண்டது, தற்போது 17.40 அடி நீர் நிரம்பி உள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரியானது, 13,50 அடி நீர் நிரம்பி உள்ளது. 15.30 ஆழம் கொண்ட பொன்விளைந்த களத்தூர் ஏரி, 11.90 அடி நீர் நிரம்பி உள்ளது. 16 அடி ஆழம் கொண்டதில் கொளவாய் ஏரியானது, 12.90 அடி நிரம்பியுள்ளது