மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு : என்னென்ன திட்டங்கள் ?
நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறது. தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகின்றது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், இன்று மீதமுள்ள தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, தேர்தல் அறிக்கையையும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் சிலவற்றை காணலாம் :
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் மொழி ஆட்சி மொழியாக்கப்படும்
உச்சநீதிமன்ற கிளைகள் இந்தியாவின் ஆறு மண்டலங்களில் நிறுவப்படும்
கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரப்படும்
அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஓதுக்கீடு
காவல்துறையில் பெண்களுக்கு தனிப்பிரிவு
குழந்தை கடத்தல், போதைப்பொருட்கள், பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஒழிக்கப்படும்
விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க திட்டங்கள்
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்
ரேஷன் பொருட்கள் வீட்டில் வழங்கப்படும்
ஆசிரியர் பணிமாற்றம் ஊழற்ற முறையில் நடைபெறும்
டோல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்படும்
காவல்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும்
மீனவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும்
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீர் செய்யப்படும்
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும்