தொடரும் மழை: செம்பரம்பாக்கத்தில் 1000 கன அடி, புழல் ஏரியில் 2000 கன அடி நீர் திறப்பு

தொடரும் மழை: செம்பரம்பாக்கத்தில் 1000 கன அடி, புழல் ஏரியில் 2000 கன அடி நீர் திறப்பு
தொடரும் மழை: செம்பரம்பாக்கத்தில் 1000 கன அடி, புழல் ஏரியில் 2000 கன அடி நீர் திறப்பு

சென்னையில் புழல் ஏரியில் இருந்து 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 கன அடிக்கு திறக்கப்பட்டு, பின் படிப்படியாக 1500 கன அடியில் இருந்து தற்போது 2000 கன அடியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

போலவே செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக 500 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்பு கருதி ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதியம் 3 மணிக்கு கூடுதலாக 500 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இப்படியாக செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 1000 கன அடி திறக்கப்படவுள்ளது.

ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி, லட்சுமிபுரம், ஆண்டார்மடம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com