செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் 2 ஆயிரம் கனஅடி நீர்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் 2 ஆயிரம் கனஅடி நீர்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் 2 ஆயிரம் கனஅடி நீர்
Published on

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றும் தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் நேற்று முன்தினம் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை அதிகரிது ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், உபரி நீர் திறப்பு 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் மழை நின்றதை அடுத்து ஏரிக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2840 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலுமாக மழை நின்றும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com