தமிழ்நாடு
கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 2 பேர் உயிரிழப்பு
கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 2 பேர் உயிரிழப்பு
(கோப்பு புகைப்படம்)
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் 13,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. குணமடந்தவர்களின் எண்ணிக்கை 7289 ஆக உள்ளது.
(கோப்பு புகைப்படம்)
இந்நிலையில், கோயம்பேடு மங்கம்மாள் நகரை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அதேபோல், திருவல்லிக்கேனி சாந்தி தெருவை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேஎம்சியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.