உயிரிழந்தவரின் உறவினர்
உயிரிழந்தவரின் உறவினர்புதியதலைமுறை

திருச்செந்தூர் | முருகன் கோயிலில் யானை தாக்கியதில் பாகன் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து பாகன் உட்பட 2 பேர் உயிரிழப்பு. படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிர் பிரிந்தது.
Published on

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து பாகன் உட்பட 2 பேர் உயிரிழப்பு. படுகாயமடைந்து மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற நிலையில் உயிர் பிரிந்தது. இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

இதுகுறித்து மாவட்ட அலுவலர் ரேவதி ரமன் அளித்த பேட்டியில், “யானை மிகவும் அமைதியான மிருகம்.தற்போது அதன் அமைதி தன்மையிலேயே யானை உள்ளது. தற்போது யானைக்கு 26 வயது ஆகியுள்ளது.இதுவரை அந்த யானையால் இதுபோன்ற சம்பவம் ஏற்படவில்லை. யானை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மிருகம். யானையின் நெருக்கமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உணவு உட்கொள்ளாது.

தற்போது வரை உணவு எடுத்துக் கொள்ளவில்லை. யானையை பார்க்க பாகன்கள் பார்க்க போய் உள்ளனர். தும்பிக்கை மற்றும் காலால் தாக்கியதால் பாகன் மற்றும் உறவினர் உயிரிழந்துனர். இங்கிருந்து யானையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. விரிவான விசாரணக்கு பிறகே முழுவிபரம் தெரியவரும்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com