தருமபுரி | வேலைக்கு வந்த பட்டியலின பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்... மாமியார், மருமகள் கைது

மொரப்பூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து கைதான பெண்கள்
சம்பவத்தை தொடர்ந்து கைதான பெண்கள்pt web

செய்தியாளர் சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டியை அடுத்துள்ள போளையம்பள்ளி கிராமத்தில் இருந்து பட்டியலின வகுப்பைச் சார்ந்த வயது முதிர்ந்த பெண்கள் மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரன் என்பவரது விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்துள்ளனர்.

மேலும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் கொடுத்ததாக வீடியோ வெளியாகியது. இதை அதே கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து கைதான பெண்கள்
என் மண் என் மக்கள்: ஜெ.பி.நட்டா பேரணி செல்ல இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட செல்லி (50) என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தேநீர் கொடுத்த தரணி என்பவரிடமும், அவரின் மாமியார்‌ சின்னதாயி என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விசாரணை முடிந்த பிறகு தரணி மற்றும் சின்னத்தாய் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 - ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com