தலை ஒருபுறம்.. உடல் ஒருபுறம்.. போலீசாரால் தேடப்பட்டவரை கொலை செய்த பெண்..!

தலை ஒருபுறம்.. உடல் ஒருபுறம்.. போலீசாரால் தேடப்பட்டவரை கொலை செய்த பெண்..!
தலை ஒருபுறம்.. உடல் ஒருபுறம்.. போலீசாரால் தேடப்பட்டவரை கொலை செய்த பெண்..!

போலீசாரால் தேடப்பட்டு வந்த நபரை கொலை செய்த  பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலியை சேர்ந்தவர் விக்கிரமாதித்த ராஜா என்ற ராஜபாண்டி. இவர் மீது கார் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதனால் இவர் மீது நெல்லை காவல்துறை பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இதனிடையே விக்கிரமாதித்த ராஜாவுக்கும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் புதியம்புத்தூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அப்போது விக்கிரமாதித்த ராஜா, சித்ராவை தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து சித்ரா மற்றும் விக்கிரமாதித்த ராஜாவின் ஓட்டுநர் ராமர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து விக்கிரமாதித்த ராஜாவை கொலை செய்து தலையை புதியம்புத்தூர் அருகே உள்ள கிணற்றிலும் உடலை தட்டாப்பாறை அருகே குவாரியிலும் கடந்த 25 தினங்களுக்கு முன் வீசியுள்ளனர். 

இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விக்கிரமாதித்த ராஜாவின் மொபைல் எண்ணை காவல்துறை சோதித்தபோது அவர் அதிக நேரம் சித்ரா மற்றும் ராமருடன் பேசி வந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கொலை செய்ததை ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட விக்கிரமாதித்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சித்ரா உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com