கன்னியாகுமரி: நடுக்கடலில் கவிழ்ந்த விசைப்படகு - தத்தளித்த 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

கன்னியாகுமரி: நடுக்கடலில் கவிழ்ந்த விசைப்படகு - தத்தளித்த 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

கன்னியாகுமரி: நடுக்கடலில் கவிழ்ந்த விசைப்படகு - தத்தளித்த 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
Published on

கன்னியாகுமரி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கில்பர்ட். இவருக்கு சொந்தமான 'விண்ணேற்பு மாதா' என்ற விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஓட்டுனர் மதன் தலைமையில் கடந்த 22-ம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என மொத்தம் 19 பேர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். விசைப் படகானது 40 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அலையில் சிக்கி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சேதமடைந்த படகு மெல்ல மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கிய நிலையில் விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் விசைப்படகில் புகுந்த கடல் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற 'நிகாஷ்' என்ற விசைப்படகில் இருந்த மீனவர்கள் கடலில் விசைப்படகு மூழ்கி மீனவர்கள் தத்தளித்து கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக அந்த படகில் இருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மீட்ட மீனவர்களை தங்கள் படகு மூலம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டுவருவதாக குளச்சல் கடல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட 19 மீனவர்களும் மாலை கரை திரும்பிய நிலையில் விபத்து குறித்து மீனவர்களிடம் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: 'இதில் ஏதேனும் ஒன்றை மீறினால்கூட...' ஆர்எஸ்எஸ் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் வெளியீடு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com