திருவள்ளூர்: ஒரே தொழிற்சாலையைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா!

திருவள்ளூர்: ஒரே தொழிற்சாலையைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா!
திருவள்ளூர்: ஒரே தொழிற்சாலையைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் செயல்பட்டு வரும் இரும்பு தொழிற்சாலையில், பணியாற்றும் 19 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சி.டி.எச் சாலையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 19 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலையடுத்து தொழிற்சாலை முழுவதும் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com