சென்னையில் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா
சென்னையில் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சென்னையில் மட்டும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மக்கள் பீதியில் உள்ளனர். காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. இதிலும் குறிப்பாக ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு, ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட செய்திகள் மக்களை கதிகலங்கச் செய்துள்ளன.

அந்த வகையில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருப்பது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இதில் கொரோனா வைரஸ் பாதித்த நபரின் வீட்டில் குடியிருந்த 11 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com