“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி

“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி
“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. 

இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை தொடர்ந்து மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்று டிடிவி.தினகரன் தரப்பினர் கூறியதை அடுத்து, பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதனால் தேர்தல் அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டப்பேரவை அலுவலகம் அனுப்பியது. 

இந்நிலையில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 18 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com