\
தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Published on

18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். இதில் 9 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி டி.ஜி.பி. அலுவலக ஐ.ஜி.-ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தலைமை அலுவலக டி.ஐ.ஜி.-ஆக பணிபுரிந்த செந்தில்குமாரி ரயில்வே டி.ஐ.ஜி.-ஆக மாற்றப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிவீரபாண்டியன், சீனிவாசன், பாலாஜி சரவணன், பாலகிருஷ்ணன், சண்முகம், மீனா, ஸ்டாலின், ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com