தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தமிழக தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தமிழக தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தமிழக தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மார்ச் 19ஆம் தேதி வேட்பு மனு தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச், 26ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பர்சீலனை மார்ச், 27ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச், 29ஆம் தேதி ஆகும். ஏப்ரல், 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே, 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com