சூறாவளிக்குப் பின் தோட்டத்தை பார்க்கச்சென்ற இளைஞர் பலி : சேலத்தில் பரிதாபம்..!

சூறாவளிக்குப் பின் தோட்டத்தை பார்க்கச்சென்ற இளைஞர் பலி : சேலத்தில் பரிதாபம்..!
சூறாவளிக்குப் பின் தோட்டத்தை பார்க்கச்சென்ற இளைஞர் பலி : சேலத்தில் பரிதாபம்..!

எடப்பாடி அருகே சூறாவளி காற்று இரவு வீசிய நிலையில் காலையில் தோட்டத்தை பார்க்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள வெள்ளரி வெள்ளி கிராமம் கரும்பாறை காட்டைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் லோகேஸ்வரன் (17). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். இவர் தற்போது வீட்டிலிருந்து தோட்ட வேலைகளை கவனித்து வருகின்றார். இந்நிலையில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் மரங்கள் சாய்ந்தன.

காலை தன் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்ப்பதற்காக லோகேஸ்வரன் சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகினார். அவரை மீட்ட குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தோட்டத்திற்கு சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com