தஞ்சை: மரிக்காத மனித நேயம் - 2வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்ட 16 கோடி ரூபாய் ஊசி

தஞ்சை: மரிக்காத மனித நேயம் - 2வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்ட 16 கோடி ரூபாய் ஊசி
தஞ்சை: மரிக்காத மனித நேயம் - 2வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்ட 16 கோடி ரூபாய் ஊசி

தஞ்சையில் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஏராளமானோர் செய்த நிதி உதவியால்,16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ் எழிலரசி தம்பதியின் 2 வயது பெண் குழந்தை பாரதி. முதுகு தண்டுவட தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசியை, அமெரிக்காவில் இருந்து வரவழைக்க வேண்டிய நிலையில், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் இத்தம்பதி உதவி கோரினர்.

90 நாட்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் உதவி செய்ததையடுத்து 16 கோடி நிதி கிடைக்கப்பெற்று, அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து, பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com