தோப்புக்கு சென்ற சிறுமி கொலை : சீர்காழி அருகே கொடூரம்

தோப்புக்கு சென்ற சிறுமி கொலை : சீர்காழி அருகே கொடூரம்
தோப்புக்கு சென்ற சிறுமி கொலை : சீர்காழி அருகே கொடூரம்

சீர்காழி அருகே தோப்புக்குச் சென்ற 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்தவர் தர்ஷினி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்ற தர்ஷினி மாலை தோப்பு ஒன்றிற்கு சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரைத் தேடிச்சென்றனர். அப்போது கழுத்து, தலை ஆகிய இடங்களில் ரத்தக்காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டதில் சிறுமி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com