சசிகலாவுடன் உரையாடிய 15 பேர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்: ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை

சசிகலாவுடன் உரையாடிய 15 பேர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்: ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை
சசிகலாவுடன் உரையாடிய 15 பேர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்: ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை

சசிகலாவுடன் உரையாடிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி உட்பட 15 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரையும் நீக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி, கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய,

கள்ளக்குறிச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன்,

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி,

தேனியைச் சேர்ந்த ஏ.கே.எம் அழகர்சாமி,

வேலூரைச் சேர்ந்த எல்.கே.எம்.பி. வாசு,

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சோமாத்தூர் ஆ. சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா,

பருத்தியூர் நடராஜன் உள்ளிட்ட 15 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com