
ஏற்கெனவே 55 மீனவர்களை சிறைபிடித்த நிலையில் மேலும் 14 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 55 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் பயணித்த இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.