தேனி: பொதுமக்களை துரத்தித் துரத்தி கடித்த தெரு நாய் - சிறுமி உட்பட 13 பேர் காயம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெரு நாய் கடித்ததில் சிறுமி உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
தெரு நாய்
தெரு நாய்மாதிரி புகைப்படம்

வருசநாடு பகுதியில் பொதுமக்கள் அன்றாட வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த தெரு நாய் ஒன்று அவர்களை துரத்தித் துரத்தி கடித்தது. இதில் மோனிஷா ஸ்ரீ என்ற 7 வயது சிறுமி, ஜெயசித்ரா, ரேவதி, சுபத்ரா தேவி, ஜெயா உள்ளிட்ட நான்கு பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்து முதற்கட்டமாக வருசநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்மாதிரி புகைப்படம்
தெரு நாய்
திண்டுக்கல்: மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை; விசாரிக்கும் போலீஸ்

படுகாயமடைந்த சிறுமி உள்ளிட்ட 10 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை கடித்த நாயை வருசநாடு ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com