நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி சென்ற 13 பேர் கைது

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி சென்ற 13 பேர் கைது
நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி சென்ற 13 பேர் கைது

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் புதுக்கோட்டை மக்களுக்கு ஆதரவாக பேரணியாக சென்றவர்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தண்ணீர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திருச்சியில‌ இருந்து பேரணியாக புறப்பட்டனர். இதைய‌றிந்த காவல்துறையினர், திருச்சி விமானநிலையம் அருகே சுங்கச் சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 13 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களின் 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். ஆனால், பேரணியின் போது முன்னதாகவே சென்ற 10க்கும் மேற்பட்டோர் நெடுவாசலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com