\
ஆர்.கே நகரில் நடத்திய சோதனையில் 12 லட்சம் பறிமுதல்

ஆர்.கே நகரில் நடத்திய சோதனையில் 12 லட்சம் பறிமுதல்

ஆர்.கே நகரில் நடத்திய சோதனையில் 12 லட்சம் பறிமுதல்
Published on

ஆர்.கே.நகரில் தேர்தல் பறக்கும் படையினர் இரவில் நடத்திய ரோந்துப் பணியில் 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 17 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சீனிவாசன் என்பவரது ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றினர். ‌அங்கு இருந்த 12 ‌பேரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசிமேடு துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றுகொண்டிருந்த 5 பேரைப் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 28 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை செய்த காவல்துறையினர், அவர்கள் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com