குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி

குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி
குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி

வேதாரண்யம் அருகே வேன் கவிழ்ந்து 9 குழந்தைகள், ஆசிரியை பலியான 11-ம் ஆண்டு நினைவு தினத்தில் நாகக்குடையானில் உள்ள நினைவு ஸ்தூபியில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாகக்குடையான் கிராமத்திலிருந்து பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்த, கரியாப்பட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி வேன் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கத்தரிப்புலம் கோயில் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 9 பள்ளிக் குழந்தைகள், ஆசிரியை சுகந்தி ஆகியோர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த குழந்தைகளின் நினைவாக நாகக்குடையன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிராம மக்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் விபத்தில் இறந்த ஆசிரியை மற்றும் 9 குழந்தைகளுக்கு 11-ம் ஆண்டு நினைவு தினத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com